டெல்லி: எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் இஜாஸ் பாஷாவுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த காஜா மொய்தீன் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் தீவிரவாத குழு தலைவரிடம் புதிய மென்பொருள் மூலம் பேசியதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாத குழுவின் தலைவர் யார், எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்து டெல்லி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.