சென்னை: தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பொழுது போக்கு மையங்கள், வழிபாட்டு தலங்கள், கடற்கரை, பூங்கா பகுதிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாடினர். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரையில் ெபாதுமக்கள் அதிக அளவில் கூடினர். இவர்கள் விட்டுச்சென்ற குப்பை ஆங்காங்கே குவிந்தது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உத்தரவின்படி மெரினா கடற்கரையில் 2 முகாம்கள், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் தலா ஒரு முகாம் என்று மொத்தம் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.