சென்னை: பிரிமியர் பேட்மின்டன் லீக் (பிபிஎல்) தொடரின் 5வது சீசன் சென்னையில் நாளை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு, கோப்பை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேட்மின்டன் வீரர்கள் சாய் பிரனீத்(பெங்களூர்), லக்ஷயா சென் (சென்னை), சாத்விக் சாய்ராஜ் (சென்னை), கிறிஸ்டினா பீட்டர்சன் (லக்னோ), சங்கர் முத்துசாமி (சென்னை), தாய்லாந்தைச் சேர்ந்த தனானங் சக் (நார்த்ஈஸ்டர்ன்) உட்பட பலர் பங்கேற்றனர். இத்தொடரை இந்திய டென்னிஸ் சங்கம், ஸ்போர்ட்ஸ் லைவ் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன. நிகழ்ச்சியில் பேசிய ஸ்போர்ட்ஸ் லைவ் செயல் இயக்குநர் பிரசாத் மன்கிபூடி, ‘இந்த ஆண்டு போட்டிகள் சென்னை, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும்.