×

கோட்டைப்பட்டினத்தில் இறந்து மிதந்த கடல் பசு

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விசைப்படகில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் இறந்த நிலையில் மிதந்துக் கொண்டிருந்த கடற்பசுவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்டுகொண்டுவந்த கடற்பசு 9அடி நீளமும், 300 கிலோ எடையும் இருந்தது.

 பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த வனத் துறையினர். கடற்பசுவை பிரேதபரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகுகள் மோதியதில், கடல் பசு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags : Fort Dead , Dead, sea cow , Fort
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...