பொள்ளாச்சி : காணும் பொங்கலையொட்டி பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவி மற்றும் ஆழியாரில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, பூங்காவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர்.
நேற்று காணும் பொங்கலையொட்டி, ஆழியார் அணை மற்றும் பூங்காவிற்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகளவில் வந்திருந்தனர்.