வாஷிங்டன்: அணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்களை சட்டவிரோதமாக திருடியதாக 5 பாகிஸ்தானியர்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஜான் சி டெமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன், ஹாங்காங், கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமகன்கள் 5 பேர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு அனுமதி இல்லாமல் அமெரிக்க தொழில்நுட்பத்தை அனுப்ப துணை போனதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை மீறி தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக ஜான் சி டெமர்ஸ் கூறியுள்ளார்.