திருச்சி அருகே மாடுமுட்டி குழந்தை காயம்

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 3 வயது குழந்தை காயமடைந்தது. ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த வினோபா (3) என்கிற குழந்தையை மாடு முட்டியது. மார்பில் மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தை வினோபா சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: