வெந்நீரில் தவறிவிழுந்த குழந்தை பரிதாப பலி

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் அருகே குளிப்பதற்கு பக்கெட்டில் வைத்திருந்த வெந்நீரில் தவறி விழுந்து 2 வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவொற்றியூர், சண்முகபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். மெக்கானிக். இவரது மனைவி ஜனனி. இவர்களின் 2வது மகள் சிவானி (2). கடந்த 7ம் தேதி சிவானியை குளிக்க வைப்பதற்காக, தாய் ஜனனி ஒரு பக்கெட்டில் வெந்நீர் வைத்துள்ளார். அப்போது அவ்வழியே ஓடிவந்த சிவானி, எதிர்பாராத விதமாக வெந்நீர் உள்ள பக்கெட்டுக்குள் தவறி விழுந்தாள்.

இதில், உடல் முழுவதும் வெந்து அலறி துடித்தாள். இதை பார்த்து அலறி துடித்த ஜனனி, உடனடியாக குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சிவானி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: