கோவை: பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோவை போலீஸ் கமிஷனரிடம் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நடைபெற்றதாக தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி திராவிடர் விடுதலை கழகத்தினர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-