பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள இக்கிராமத்தினர் விவசாயம் செழிக்கவும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும் ஆண்டுதோறும் தை 3ம் தேதி வாழைப்பழங்களை சூறைவிடும் திருவிழா நடத்துகின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக தங்களது வீடுகளில் கூடைகளில் வாழைப்பழங்களை நிரப்பி பூஜை செய்தனர். தொடர்ந்து ஊர் எல்லை தெய்வமான ரெங்கம்மாள் கோயிலில் இருந்து, பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்களை நிரப்பி தலையில் வைத்து ஆண்கள் மட்டுமே சுமந்து வந்தனர்.