மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு

* தமிழகத்தில் 22 பேர் தேர்ச்சி பெற்று சாதனை

* நேர்முக தேர்வு பிப்ரவரியில் தொடக்கம்

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 22 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு பிப்ரவரியில் தொடங்குகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டு தோறும் ஐஎப்எஸ்(இந்திய வனப்பணி) பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு 90 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. முதலில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி  வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று வெளியிட்டது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வனப்பணிக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 22 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள் ஆவார்கள்.

ஒட்டு மொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் (சென்னை, பெங்களுர், திருவனந்தபுரம்) 81 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் நேர்முகத் தேர்வு டெல்லியில் நடைபெறும்.

இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு பயிற்சி மற்றும் மாதிரி நேர்முக தேர்வு சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் இந்திய வனப்பணி மூத்த அதிகாரிகள் மற்றும் சிறந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்குபெற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் பங்குபெற ஆர்வம் உள்ள மாணவர்கள்  6379784702 தொடர்பு கொள்ளலாம் அல்லது interview@shankarias.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  பணிகள் ஒதுக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: