×

சென்னை ஐஐடிக்கு ரூ.5கோடி நன்கொடை: முன்னாள் மாணவர் வழங்கினார்

சென்னை: சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் கிருஷ்ணசிவகுலா. இவர், அமெரிக்காவில் தொழில் செய்து வருகிறார். சென்னை ஐஐடியின் விடுதியில் கூடுதல் வசதியை ஏற்படுத்த கிருஷ்ண சிவகுலா ரூ.5 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். சென்னை ஐஐடியில் உள்ள காவேரி விடுதியை மேம்படுத்தவும் புனரமைக்கவும் இந்த நன்கொடை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், முன்னதாக ரூ.2 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. காவேரி விடுதிதான் சென்னை ஐஐடியில் கடந்த 1961ம் ஆண்டு கட்டப்பட்ட விடுதி.

இதுவரை அந்த விடுதி அரசின் நிதியில் இருந்தே பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது முன்னாள் மாணவர் கிருஷ்ணசிவகுலா கொடுத்த நன்கொடை மூலம் அந்த விடுதியை புனரமைத்து, கூடுதல் வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் இரண்டு விடுதிகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் மாணவர் கிருஷ்ண சிவகுலா நன்கொடை வழங்க முன்வந்துள்ள தொகைக்கான காசோலை ஐஐடியின் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : IIT Chennai ,Alumni , Chennai IIT, Rs 5 crore, donation, alumni
× RELATED சில்லி பாயின்ட்…