ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி முதல்வர் தலைமையில் 20ம் தேதி ஆலோசனை

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து முதல்வர் எடப்பாடி தலைமையில் வருகிற 20ம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதிமுக சார்பில், வருகிற பிப்ரவரி 24ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, நல திட்டங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து வருகிற 20ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை வருவாய் துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் செய்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: