சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது. தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் தனியாகவும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் தனியாகவும் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை முன்னமே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இரண்டு நாட்களில் வெளியிட சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ இணைய தளமான cbse.nic.in மூலம் ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும்.