டெல்லி : தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான மனுக்கள் மீது பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பல்வேறு நபர்கள், அமைப்புகள் தொடர்ந்த மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்கிலும் ஏற்கனவே மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.