டெல்லி : உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து குல்தீப் செங்கார் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.