நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

டெல்லி : நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இன்று காலை  நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இருந்தது. டெல்லி ஆளுநர் நிராகரித்த நிலையில், கருணை மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் நிரகாரித்துள்ளார்.டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நள்ளிரவில் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நிர்பயா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: