சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பூக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க சென்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 240 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தி.நகர் கண்ணம்மாபேட்டை பஜனை கோயில் தெருவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் நவீன் (19) மற்றும் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் அரிகிருஷ்ணன் (23) என தெரியவந்தது.