தொழிலாளி போக்சோவில் கைது

பெரம்பூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் புஷ்பவல்லி (47). கணவரை இழந்த இவர், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம்  இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகள் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த புஷ்பவல்லி தனது வீட்டின் அருகே தேடிப் பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. வெகுநேரம் கழித்து வந்த மகளிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் (32) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். மாணவியின் தாய் இதுபற்றி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: