வாஷிங்டன்: இழுபறியில் இருந்த அமெரிக்க - சீன வர்த்தக விவகாரத்தில் இருதலைவர்களும் கையெழுத்திட்டனர். தொடர்ந்து அதிபர் டிரம்ப், ‘சீனா செல்லும் நாள் தொலைவில் இல்லை’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உலகின் பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த 2 ஆண்டு காலமாக வர்த்தக போர் நடைபெற்று வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற வகையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. அதன்படி, அமெரிக்கா மற்றும் சீனா இடையில் முதற் கட்ட ஒப்பந்தமானது கையெழுத்தாகி இருக்கின்றது. சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன துணை பிரதமர் லியு ஹீ, பொலிட்பீரோ உறுப்பினரும் மக்கள் சீனக் குடியரசின் துணைப் பிரதமரும் கையெழுத்திட்டனர்.
இழுபறியில் இருந்த வர்த்தக ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்து சீனா செல்லும் நாள் தொலைவில் இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
- தலைவர்களில் கையொப்பமிடுதல்
- டிரம்ப்
- இழுபறி ஒப்பந்தம்
- சீனா
- எங்களுக்கு
- கோடிட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்திடுவதை டிரம்ப் நேர்காணல் செய்கிறார்
- ஜனாதிபதி