மதுரை: மதுரை ஆணையூர் முத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனடிப்படையில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில், அவர்களிடம் 550 கிராம் கஞ்சா மற்றும் பிஸ்டல் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் ஆணையூர் பகுதியைச் சேர்ந்த அழகுபிள்ளை(36), முத்துநகர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன்(24) என தெரியவந்தது.