குழந்தைகள் ஆபாச படம் பதிவிறக்கம் செய்தவர் கைது

புளியங்குடி: தென்காசி மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் பாலசுப்பிரமணியன். புளியங்குடி ஆர்எஸ்கேபி தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், இணையதளங்களில் இருந்து குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் ஏராளமானோருக்கு அனுப்பி வந்துள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து போலீசார் கண்காணித்தபோது உறுதியானது. இதையடுத்து புளியங்குடி போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: