×

கஜாபுயல் பாதித்த பகுதியில் தனிவீடு கட்டுவதற்கான நிதி ரூ.2.10 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்வு: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

நாகப்பட்டினம்: கஜாபுயல் பாதித்த பகுதியில் தனிவீடு கட்டுவதற்கான நிதி ரூபாய் 2.10 லட்சத்திலிருந்து ரூபாய் 3 லட்சமாக உயர்த்தியுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வீடு கட்டுவதற்கான தொகையை முதல்வர் பழனிசாமி உயர்த்தி அறிவித்துள்ளார் என தெரிவித்தார். அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூபாய் 2.10 லட்சம் மதிப்பில் தனி வீடு கட்டப்படுகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.


Tags : houses ,area ,Maniyan , Rs 2.10 lakh, Rs 3 lakh, increase, Minister of Finance
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்