பங்கம் பண்ணும் ஆபரணத் தங்கத்தின் விலை : சவரன் ரூ.152 குறைந்து ரூ. 30,408க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய். 3,801க்கும் சவரன் ரூ. 30,408க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் விசேஷ நாட்கள் வர உள்ள நிலையில் தங்கம் விலை  உயர்வு  பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  தங்கம் விலை  இந்தாண்டு  தொடக்கத்தில் கடுமையாக உயர்ந்து வந்தது. சில நேரங்களில் குறைவதுமாகவும்  காணப்பட்டது. அதாவது, கடந்த 2ம் தேதி ஒரு சவரன்  தங்கம் 29,888, 3ம் தேதி  30,520, 4ம் தேதி 30,656, 6ம் தேதி 31,168, 7ம் தேதி ₹30,904  என்றும் விற்கப்பட்டது. கடந்த 8ம் தேதி தங்கம் விலை  அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராம் 3,897க்கும், சவரன் 31,176க்கு விற்கப்பட்டது.

இந்த தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்பட்டது. இதற்கு முன்னர் இந்த  அளவுக்கு தங்கம் விற்பனையாகவில்லை. அதன் பிறகு  9ம் தேதி தங்கம் விலை  குறைந்து ஒரு சவரன் 30,440க்கு விற்கப்பட்டது. கடந்த 10ம் தேதி ஒரு  கிராம் தங்கம் 3,800க்கும், சவரன் 30,400க்கும் விற்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு 20 அதிகரித்து கிராம் 3,820க்கும், சவரனுக்கு  160 அதிகரித்து ஒரு சவரன் 30560க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 50.40க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளி ரூ.50,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: