×

திருப்பத்தூரில் தொழிலதிபர் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் : கத்தியால் குத்திவிட்டு கொள்ளை முயற்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்திவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை சாலையில் மரக்கடை நடத்தி வரும் ராமநாதன் என்பவரின் வீட்டிற்கு நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த 3 பேர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். ராமநாதன் கூச்சலிட்டதை அறிந்து அக்கம் பக்கத்தினர் விழித்துக் கொண்டதும் அவரை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

மேலும் அவர்கள் கொண்டுவந்த கத்தி, கைத்துப்பாக்கி மற்றும் முகமூடிகளை பதட்டத்தில் அங்கேய விட்டு சென்றனர். தகவலந்து சென்ற திருப்பத்தூர் காவல்துறையினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காயமடைந்த ராமநாதன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்து கொலை மற்றும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Robbers ,businessman ,house ,robbery ,Thiruppathur ,Tirupathur ,thieves , Thiruppathur, robbery, robbers, thieves, businessman, stabbing
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்