ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டசபைக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வரும்படி அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 3வது கட்டமாக 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து, ஜார்க்கண்ட் சட்டசபைக்கான 4வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக வாக்கு சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.