தண்டையார்பேட்டை: வெளிமாநிலங்களில் இருந்து மாவா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்து வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் 3 தனிப்படை அமைத்து தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை தமிழன் நகர் பகுதியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.