புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த படுகொலைக்குப் பிறகு, பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு ‘நிர்பயா நிதி’ என்ற திட்டத்தை தொடங்கியது. இதன்மூலம், பெண்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் நிதியாக அளிக்கப்படுகிறது. இந்த நிதியை பல்வேறு மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்துவது இல்லை என தெரிய வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், இந்தநிதி பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.