சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே கிராமப்புற மக்களை வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்பதுதான். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதுதான்.தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ₹4450.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இதுவரை மொத்தம் ₹4725.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் ₹4684.23 கோடி செலவிடப்பட்டு விட்டது.