சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஏலம் விடுபவர், எடுப்பவர்கள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டால் அந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். காஞ்சிபுரம் ஆண்டி சிறுவள்ளூரில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.