×

ஏலத்தின் மூலம் பதவிக்கு வரும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செல்லாது என அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஏலம் விடுபவர், எடுப்பவர்கள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டால் அந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். காஞ்சிபுரம் ஆண்டி சிறுவள்ளூரில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக  விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக ஏலம் விடுபவர்கள் மற்றும் ஏலம் எடுப்பவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலம் மூலம் தேர்வாகும் தலைவர் பதவி செல்லாது என உடனடியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Interview ,Thiruvallavan Interview ,Thiruvalavan , Interview ,Thiruvalavan
× RELATED மக்களவை தேர்தலில் திமுக சார்பில்...