மணிலா: பிலிப்பைன்ஸ் தீவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து குழந்தை ஒன்று பலியானாது. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் பிலிப்பைன்சில் உள்ள மின்டோனா தீவில் நேற்று காலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பிரபல தாவோ நகரில் பூகம்பத்தால் அச்சமடைந்த மக்கள் விடுதிகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறினார்கள். பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. காயமடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயங்களுடன் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் இடிந்த இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.