×

திட்டக்குடி அருகே பரபரப்பு ஏரியில் பெண் பிணம் மீட்பு கொலை செய்யப்பட்டாரா?: போலீசார் விசாரணை

திட்டக்குடி:  திட்டக்குடி அருகே ஏரியில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன், விவசாயி. இவரது மனைவி தேன்மொழி (50). நேற்று மாலை இவர் அவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே ஊரில் உள்ள பெரிய ஏரியில் ஒரு பெண்மணி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.   

அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தது தேன்மொழிதான் என தெரியவந்தது. இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரிக்கு சென்ற போது அந்தப்பெண் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஏரியில் ஒரு சட்டை மிதந்த நிலையில் கிடந்தது. அந்த சட்டை தேன்மொழிக்கு சொந்தமானதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் மர்மமான முறையில் பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : lake ,Parabara lake Parabara , Woman corpse, rescued , Parabara lake
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!