குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசி தடியடி நடத்தியும் போலீசார் விரட்டியடித்துள்ளனர்.

Related Stories: