சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 8ம் தேதி சென்னை ஐஐடி விடுதியில் தூக்கிட்டு மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வந்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.