×

உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு 1,65,659 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பல்வேறு பதவிகளுக்கு 1,65,659 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,.

கடந்த 9ம்தேதி முதல் நேற்று வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,15,814 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 35,464 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 13,117 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,264 பேர் என மொத்தம் 1,65,659 பேர் பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு மீதான பரிசீலனை வரும் 17ம் தேதியும், மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும். தேர்வாகும் நிர்வாகிகள் ஜனவரி 6ம் தேதி பதவியேற்பார்கள்.



Tags : elections , 1,65,659 people filed, nominations,local elections
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...