கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. இதில், 27 யானைகள் பங்கேற்கின்றன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் நடத்தப்பட்ட இம்முகாம், கடந்த 2012ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழக அமைச்சர்கள் இம்முகாமை தொடங்கி வைக்கின்றனர். இம்முகாமில், தமிழகம் முழுவதும் இருந்து 27 யானைகள் பங்கேற்கின்றன. முகாமில் நிர்வாக அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகை என அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டன. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை குளிக்க வைக்க குளியல் மேடை, ஷவர் மேடை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடக்கம் : 27 யானைகள் பங்கேற்கின்றன
- தேக்கம்பட்டி மேட்டுப்பாளையம்
- கோயில் யானைகள் புத்துணர்ச்சி முகாம்
- கோயில் யானைகள் புத்துயிர் முகாம்
- Thekkampatti