ஜனவரி 31ல் பொருளாதார அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: மத்திய அரசின் 2020-21ம் ஆண்டின் பட்ஜெட் பிப்ரவவி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் ஜனவரி 31ம் தேதி பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. மத்திய அரசு வட்டாரங்கள் இந்தத் தகவலை தெரிவித்தன. கடந்த 2015-16ம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் சனிக்கிழமையன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

வழக்கான மரபு தொடரும் என்று நாடாளுமந்ற விவகாரத்துறை அமைச்சர் பிரக்லாடு ஜோஷி தெரிவித்தார்.  சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கமான நடைமுறையான பிப்ரவரி 1ம் தேதிக்கு பதிலாக வேறு நாளில் பட்ஜெட்  தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு ஜோஷி பதிலளித்தார்.

Related Stories: