×

சில்லி பாயின்ட்...

* பாகிஸ்தான் - இலங்கை அணிகளிடையே ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம், கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இலங்கை அணி முதல் இன்னிங்சே இன்னும் முடியாததால் (282/6), இப்போட்டி டிராவில் முடிவது உறுதியாகிவிட்டது.
* தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் (43 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பவுச்சர், அனைத்து வகை போட்டிகளிலும் சேர்த்து 999 விக்கெட் வீழ்ச்சியில் பங்களித்து உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கெய்ரன் போலார்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பூம்ரா இருவரும் தற்போது மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். எனினும், உடல்தகுதியை மேம்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொள்ள இருவரும் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நேற்று தனது 25வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். அவருக்கு சக வீரர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
* பேட்டிங்கின்போது அணியும் முழங்கை காப்பு பட்டைகள் குறித்து தனக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று சச்சின் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : All Sports
× RELATED சில்லிபாயின்ட்..