சியோல்: மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட சோகா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்புடன் அணு ஆயுத ஒழிப்பு குறித்து இருமுறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, தன் மீதான பொருளாதார தடைகளை விலக்குவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை இந்தாண்டு இறுதிக்குள் தயார் செய்த பிறகு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்காவிடம் வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவிடம் ஏற்கனவே மூடுவதாக உறுதி அளிக்கப்பட்ட சோகா ராக்கெட் தளத்தில் வட கொரியா நேற்று மீண்டும் முக்கிய சோதனை நடத்தி உள்ளது. இது ராக்கெட் அல்லது ஏவுகணை சோதனையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.