நித்யானந்தா ஓரின சேர்க்கையாளர் : கமிஷனர் அலுவலகத்தில் சீடர் புகார்

சென்னை: பண மோசடி, செக்ஸ் புகார், நில அபகரிப்பு வழக்குகளில் நித்யானந்தாவை போலீசார்  தேடிவரும் நிலையில், அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறுகின்றனர். மேலும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கை  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நித்யானந்தா மீது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நித்யானந்தா சீடர் விஜயகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் கடந்த 2009ம் ஆண்டு சேர்ந்தேன். திருவாரூர், நாகை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. என் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து 350 இளைஞர்கள் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர். யோகா, தியானம் பயிற்சி என்ற போர்வையில் நித்யானந்தா மோசடியில் ஈடுபட்டு வருவதை நாளடைவில் தெரிந்துகொண்டேன். அவர் ஒரு செக்ஸ் வெறியர். நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பலர் ஓரினச்சேர்க்கையாளர்கள். நித்யானந்தா என்னையும் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். மாடல் அழகிகளை மயக்கி தன்னிடம் அனுப்புமாறு கூறினார்.

அவருடைய செயல்பாடு பிடிக்காமல் கடந்த 2015ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்து தப்பினேன். என்னிடம் இருந்த ₹40 லட்சம் மதிப்பிலான நகைகள் அவரிடம் உள்ளது. அந்த நகையை திருப்பி கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை பற்றி அவதூறாக தொடர்ந்து முகநூலில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். நித்யானந்தா ஆசிரமம் நடிகை ரஞ்சிதாவின் மொத்த கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நித்யானந்தா என்னுடன் பேசிய செக்ஸ் உரையாடல் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் அதனை சமர்ப்பிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: