டெல்லி சட்டப்பேரவை தேர்தல் ஆம் ஆத்மி கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் கைக்கோர்ப்பு

புதுடெல்லி: பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி என்ற புதிய அமைப்பை நடத்தி வருகிறார்.

குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் ஆவதற்கான முயற்சியில் இறங்கியபோது, தன்னுடைய அரசியல் ஆலோசகர் பணியில் அவரை நியமித்துக் கொண்டார். அவரது துல்லியமான பிரசார யுக்திகளால் மோடி அகில இந்திய அளவில் பிரபலம் ஆனார். அவர் நினைத்தபடியே பிரதமரும் ஆனார். அதைத்தொடர்ந்து, நிதிஷ்குமார் ஆலோசகராக செயல்பட்டு, அவர் பீகார் முதல்வர் ஆக உதவினார். இதேபோல், ஜெகன்மோகனுக்கும்அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். இந்த நிலையில், தற்போது அவர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுடன் கைக்கோர்த்துள்ளார். இவரை ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆலோசகராக கெஜ்ரிவால் நியமித்துள்ளார்.

Related Stories: