சென்னை: உள்ளாட்சி தேர்தலில் எவ்வளவு குழப்பங்களை செய்ய முடியுமோ, அவ்வளவு குழப்பங்களையும் தமிழக அரசு செய்துள்ளது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. பின்னர், வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் எவ்வளவு குழப்பங்களை செய்ய முடியுமோ, அவ்வளவு குழப்பங்களையும் தமிழக அரசு செய்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களில் தேர்தல் முறையாக நடக்குமா என்றால், 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் நடத்தவில்லை.