சென்னை: சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வருமான வரித்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பெண் அதிகாரி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். சோழவரம் ஊராட்சிக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தவற்கு வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். நேற்று ஆத்தூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.