சோழவரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஐடி முன்னாள் பெண் அதிகாரி மனு தாக்கல்

சென்னை: சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வருமான வரித்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பெண் அதிகாரி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். சோழவரம் ஊராட்சிக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தவற்கு வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். நேற்று ஆத்தூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று காலை சாந்தகுமாரி தேர்தல் அதிகாரியிடம் சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சாந்தகுமாரி வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் சாந்தகுமாரி, சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

பின்னர், விருப்ப ஓய்வு மூலம் பணியில் இருந்து விலகி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: