வட மாநிலத்தவருக்கு எதிராக சென்னை சென்ட்ரலில் மனித சுவர் போராட்டம்

தஞ்சை: தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வடமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரம் பேர் ரயிலில் சென்னை வந்து தமிழ்நாடு எங்கும் சென்று பல வேலைகளை பார்த்து கொண்டு இங்கேயே தங்கி விடுகின்றனர். இதன்மூலம் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளையும், வாழ்வுரிமைகளையும் பறிக்கின்றனர். எனவே தமிழர் வாழ்வுரிமையை பறிக்காதீர்கள், திரும்பி போங்கள் என வணக்கம் தெரிவித்து வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு நடத்த உள்ளோம் என்றார்.

Related Stories: