வருஷநாடு பகுதியை சேர்ந்த பந்தல்ராஜா கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாகவே பழைய தடுப்புசுவர், தடுப்பணை பகுதி மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்தது. மழை காரணமாக தற்போது மேலும் சேதம் ஏற்பட்டு தடுப்புச்சுவரை நீர் அடித்து சென்று கொண்டிருக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருஷநாடு மூல வைகையை பாதுகாக்க வேண்டும். மேலும் இங்கு மண் அரிப்பை தடுக்க வேண்டும்’’ என்றார். இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘தடுப்பணையின்றி, இப்பகுதியில் உள்ள மணல், வண்டல் மண் வீணாக அடித்து செல்லப்படுகிறது. இப்பகுதி நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்ட அதிகாரிகளிடம் தடுப்புசுவர், தடுப்பணை கட்ட கோரி பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம்’’ என்றனர்.