சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த கால தேர்தல்களில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால் தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் 2010ம் ஆண்டு மதிமுக மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. இதற்கு, மதிமுகவின் வாக்கு வங்கி கடந்த கால தேர்தல்களில் ஒரு சதவீதத்திற்கும் கீழே போய்விட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. 2011 சட்டமன்ற தேர்தலில் மதிமுக தேர்தலில் போட்டியிட வில்லை. இதனால் தனி சின்னம் ஒதுக்கப்படவில்லை. எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியில் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.