பெரம்பலூர்: பெரம்பலூரில் 2 அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி பெண், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி நாளை மறுநாள் வரை நடக்கிறது. பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு அங்குள்ள சமத்துவபுரத்தில் குடியிருக்கும் சாந்தி (53) என்ற மாற்றுத்திறனாளி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் 2 அடி உயரமே உள்ளார். இளம்பிள்ளை வாதம் தாக்கியதால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டதால் திருமணம் செய்து கொள்ளாத இவர் எளம்பலூர் சமத்துவபுரம் பகுதியில் பெட்டிக்கடை வைத்து ஜீவனம் செய்து வருகிறார்.