மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: 4.8 ரிக்டர் அளவாக பதிவு

மும்பை: பல்ஹார் மாவட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், குறிப்பிட்ட பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் பல்ஹார் பகுதிகளில் இன்று காலை 5.22 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த நவ. 20ம் தேதி இதேபகுதியில் 3.5 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக பல்ஹார் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த 2018ம் ஆண்டில் பல்ஹார் பகுதியில் நிலம் நடுக்கம் ஏற்பட்டதாக தானே மாநகராட்சி நிர்வாக பேரிடர் பிரிவும் கூறியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: