×

ஆந்திர மாநிலம் பார்மசி மாணவி கொலை விவகாரம்: 12 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் பிரேத பரிசோதனை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்த மாணவி ஆயிஷா மீரா கொலை வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரேத  பரிசோதனை நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிஷா மீராவின் உடலை தோண்டி எடுத்து சிபிஐ அதிகாரிகள் பிரேத பரிசோதனை நடத்தினர். தெனாலி சென்சுபேட்டையில் உள்ள இடிகா மயானத்தில் புதைக்கப்பட்ட ஆயிஷா மீராவின் உடல், அவரது தந்தை முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த பி.பார்மசி மாணவி ஆயிஷா மீரா 2007ல் அடித்து கொலை செய்யப்பட்டார்.


Tags : Andhra Pradesh Pharmacy Student Murder: CBI Officers Re-Autopsy ,CBI ,Re-Autopsy ,Andhra Pradesh Pharmacy Student Murder , Andhra, student, 12 year, CBI, autopsy
× RELATED குட்கா முறைகேடு வழக்கை...